Tuesday, September 27, 2011

பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால்,
மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப்
பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும்
சொல்லாகத் திகழ்கிறது.. அத்தகு பெருமைபெற்ற நம் அய்யா அவர்களின்
வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சில:

@@@@@

அய்யாவின் அறிவாற்றல்

கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அய்யா
சொற்பொழிவாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிக்காக நமது உண்மை ஆசிரியர் கி.
வீரமணி அவர்களும் உடன் சென்றிருந்தார். இயல்பிலேயே தன்னம்பிக்கையினை
அதிகமாகப் பெற்ற அய்யா அவர்கள் எதையும் தாமே செய்து பார்ப்போம் என்ற
ஆர்வம் கொண்டவர்.

கான்பூர் மாநாட்டினை முடித்துவிட்டு லக்னோ சென்று பேசச் சென்றார்.
ஆங்கிலத்தில் பேச முயன்றார். ஆசிரிருக்கோ வியப்பு. பேசும் இடமோ
பல்கலைக்கழகம், அய்யா படித்ததோ மூன்றாம் வகுப்புவரை மட்டுமே. எனினும்,
அறிவு ஆசான் துணிச்சலுடன் பேச நினைத்தார்.

ஒரு சிறிய முன்னேற்பாட்டின்படி பேசத் தொடங்கினார். அதாவது, அய்யா
ஆங்கிலத்தில் பேசுவார். அய்யாவுக்குப் பேசும்போது ஏதேனும் சந்தேகம்
ஏற்பட்டால் ஆசிரியர் அந்த வார்த்தையினை எடுத்துக்கொடுத்து சரிசெய்ய
வேண்டும். அய்யாவின் விருப்பப்படி ஆசிரியர் தயார்நிலையில் இருந்தார்.

அய்யா பேசத் தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தபோது அடுப்பு எனும் பொருளை
உணர்த்தும் ஆங்கிலச் சொல்லினைச் சொல்ல வேண்டும். அது அவரது நினைவுக்கு
உடனே வரவில்லை. பேச்சு தடைப்பட்டது. ஆசிரியரைப் பார்த்தார். அவசரத்தில்
ஆசிரியருக்கும் அந்த வார்த்தை நினைவில் வராததால் ஆசிரியர் சிறிதுநேரம்
யோசித்தபோது, அய்யா ஓவன் (Owen) என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கூறி
பேச்சைத் தொடர்ந்து ஆசிரியரை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தினார். தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் (Appropriate Word) சரியான
சொல்லையே தேர்வு செய்து பேசினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் அய்யா பேசிய
பேச்சுத் திறமையும் நுண்ணறிவும் பாராட்டுக்குரியதே. அய்யா அவர்கள்
கருத்தைத்தான் பார்த்தார். அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்.

@@@@@

அய்யாவின் பொறுமை
அய்யாவும் கண்ணப்பரும் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தபோது கண்ணப்பர்
பார்ப்பனர் ஒருவரோடு வாக்குவாதம் செய்துகொண்டே வந்துள்ளார். அப்போது
கடுமையான பல சொற்களைப் பேசும்படியான சூழ்நிலை உருவானது.

இதனை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்த அய்யா, இப்படியா பேசுவது?
பொறுமையாக அவருக்குப் புரியும்படி பதில் கூறினால்தானே அவரது தவறான
எண்ணத்தை மாற்றி நம் பக்கம் திருப்ப முடியும் என்றார்.

உடனே அந்தப் பார்ப்பனர், பெரியவரே நீங்கள் சொல்வதை அவர் கேட்க மாட்டார்.
இவர்கள் இராமசாமி நாயக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான்
பேசுவர் என்றார். அய்யாவும் கண்ணப்பரும் தங்களுக்குள் சிரித்துக்
கொண்டனர்.

கண்ணப்பர் அடுத்த வண்டிக்குச் செல்வதற்காக இறங்கிவிட்டார். அய்யா
கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அந்தப்
பார்ப்பனரைப் பார்த்து, அவர்தானய்யா ராமசாமி நாயக்கர். இப்படிப்
பேசிவிட்டீரே என்றார். கழிப்பறையிலிருந்து அய்யா வந்தவுடன் பார்ப்பனர்
எழுந்து நின்று இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, என்னை
மன்னித்துவிடுங்கள் அய்யா. தங்களை யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன்.
உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களே பொய்யர்கள். தங்களது நற்குணமும்
பொறுமையும் யாருக்கும் வராது. எங்கள் வீட்டிற்குத் தாங்கள் கட்டாயம்
வரவேண்டும் என்று உபசரித்துச் சென்றார்.

@@@@@

அய்யாவின் சமாளிப்புத் திறமை

ஒருமுறை அய்யாவும் அண்ணாவும் மும்பை சென்றிருந்தனர். அங்கு எம்.என்.ராய்
அவர்களைச் சந்தித்தனர். அய்யாவிடம் பேரன்பும் பெருமதிப்பும்
வைத்திருந்தவர் ராய். தமது அன்பினை வெளிப்படுத்த அய்யாவுக்கு விருந்து
கொடுக்க நினைத்து அழைத்தார். அய்யாவும் அண்ணாவும் விருந்திற்குச்
சென்றனர். ராய்க்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது.
அய்யாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் மட்டுமே தெரியும்.

பிரமாதமாக நடைபெற்ற விருந்தில் இருவருக்கும் ராய்தான் பரிமாறினார்.
அய்யாவுக்கு, குறிப்பிட்ட ஒரு பதார்த்தத்தின் மீது ஆசை ஏற்பட்டது.
மனதிற்குப் பிடித்ததைக் கேட்டு விடுவது அய்யாவின் குணங்களுள் ஒன்று.
எப்படிக் கேட்பது? ராய்க்குத் தமிழ் தெரியாதே, ஊறுகாய் என்றால்
ராய்க்குப் புரியாதே, என நினைத்தார். இதன் ஆங்கிலப் பெயரும் அப்போது
மறந்துவிட்டது அய்யாவுக்கு.

அய்யாவின் தேவையை அண்ணா புரிந்துகொண்டார். எனினும் அய்யாவின் சமாளிப்புத்
திறமையைக் கண்டு ரசிக்க விரும்பினார். ராய் அருகில் வந்தபோது, நாக்கில்
கையை வைத்து நாக்கால் ஒரு சொடக் கொடுத்து ஓசை எழுப்பிக் காட்டினார்
அய்யா.

உணவு பறிமாறிக்கொண்டிருந்த ராய் புரிந்துகொண்டு, ஓ பிக்கிள் என்றார்.
உடனே, எஸ் எஸ் பிக்கிள் என்றார் மலர்ச்சியுடன் அய்யா.

நாவினால் ஓசை எழுப்பியே தமது கருத்தைத் தெரிவித்துச் சமாளித்த அய்யாவின்
திறமையை எண்ணி வியந்தார் அண்ணா.

@@@@@



நாகப்பட்டினம் விஜயராகலு வீட்டிற்கு அய்யா உணவு சாப்பிடச் சென்றார். 15
பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. அய்யா 25 பேருடன் சென்றார்.
சென்றவர்களுள் பட்டுக்கோட்டை அழகிரி மெதுவாகச் சாப்பிடும் இயல்புடையவர்.
பச்சரிசிச் சோறு காலியாகிவிட்டது. எனவே, அழகிரிக்கு மோர் சாப்பாடு
சாப்பிட்டபோது குறுவை அரிசிச் சோறு பரிமாறினர். சிவந்த நிறத்தில் பெரிது
பெரிதாக இருந்த சோற்றினைப் பார்த்த அழகிரி கோபமுற்றார். சாப்பிட்ட கையை
உதறிவிட்டு வேகமாக எழுந்தார். இதனைப் பார்த்த அய்யா, அப்பா அழகிரி இதுவரை
மல்லிகைப்பூ, இப்போது ரோசாப்பூ என்றதும் அனைவரும் சிரித்தனர். மேலும்
அய்யா, அழகிரிக்கு இரண்டு சாத்துக்குடிப் பழம் கொடுங்கள். பசியும்
தணியும் சினமும் போய்விடும் என்றாராம்.

@@@@@

தண்ணீரும் மோரும்!

ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் அய்யாவிடம் பேட்டி காண வந்தார்.
வந்தவருக்குக் காப்பி கொடுக்கச் சொன்னார் அய்யா. நான் இப்ப இங்க காப்பி
சாப்பிடுகிறேன். போன தலைமுறையில் இது நடந்திருக்குமா? நான் ஆச்சாரமான
பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் என்றார் வந்தவர். புன்முறுவல் பூத்த
அய்யா, இப்போது காபி சாப்பிடுகிறீர் என்றால் என் பிரச்சார மாற்றம்தானே!
என்றார்.

மேலும் அய்யா, பல வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ப்பன நண்பர் - குடும்ப
நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஏதாவது சாப்பிடுங்கள் தாகமாக
வந்திருப்பீர்களே என்றேன். ஒன்றும் வேண்டாம் என்றார் நண்பர். கொஞ்சம்
வற்புறுத்தவே, சரி மோரும் தண்ணீரும் கொடுங்கள் என்றார். கொடுத்தோம்.

மோரில் சிறிது நீரைச் சேர்த்துச் சாப்பிட்டார். எதற்காக மோரில் நீரைக்
கலந்து சாப்பிட்டீர்கள் என்றேன். மோரில் நீர் கலந்தால் மோர்
சுத்தமாகிவிடும் அதனால்தான் என்றார். நீரும் மோரும் எங்கள் வீட்டிலே
இருந்தது. எங்க வீட்டு மோரை எங்க வீட்டுத் தண்ணீரே சுத்தப்படுத்துமா
என்று கேட்டேன் என்றார். பேட்டி காண வந்தவர் தனது மடைமைத்தனத்தை நினைத்து
தலைகுனிந்து சிரித்தாராம்.

நாகம்மையார் மரணமடைந்தபோது உள்ளே சென்று பார்க்கச் சென்றவர்களைப்
பார்த்து, யாரும் அழக்கூடாது. அழுவதால் இறந்தவர் மீண்டு வரப் போவதில்லை.
அமைதியாகச் சென்று பார்த்து வாருங்கள் என்றார் அய்யா. மேலும், அவரது உடல்
அடக்கத்தினைப் புதுமையான முறையில் செய்தார். நாகம்மையாரின் உடலினை ஒரு
பெட்டியில் வைத்து (முஸ்லிம் முறை) மாடு பூட்டிய வண்டியில் எடுத்துச்
சென்று (கிறித்துவ முறை) எரியூட்டி (இந்துமுறை) ஒற்றுமையினைப் புகுத்தி
சமத்துவம் கண்டார் அய்யா.

@@@@@


அய்யாவின் தாடி ரகசியம்

ஒரு நாள் இரவு அய்யாவின் வீட்டு மாடியில் அவரது நண்பர்கள் அய்யா தாடி
வளர்ப்பது ஏன் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முக அழகுக்காக தாடி
வளர்ப்பதாக என்னிடம் அய்யா சொன்னார் என்றார் மாயவரம் நடராசன்.
எஸ்.வி.லிங்கமோ, இல்லையில்லை ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி
வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினார்
என்றார். உடனே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சவரச் செலவு தினமும் நாலணா
மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றதும், பட்டுக்கோட்டை அழகிரி, கொஞ்ச
நேரம் என்றாலும் இன்னொரு வரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக
உள்ளது என்றாரே என்னிடம் என்றார்.

மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன்
என்று விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே என்றார் பூவாளூர் பொன்
னம்பலனார். அப்போது கி.ஆ.பெ.விசுவநாதம், தூங்குங்கள் நாளை உங்களுக்கு
உண்மையான காரணத்தை அய்யாவிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

மறுநாள் அய்யாவிடம் தாடியின் ரகசியம் கேட்டுவிட்டு, தினமும் பத்து
நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த
நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டேன். தானாக வளர்ந்துவிட்டது.
வேறெதுவும் காரணம் இல்லை என்று அய்யா கூறியதாக அனைவரிடமும் கூறினார்.
அப்போது கருகுடி சின்னையா பிள்ளை, இன்னும் யார் யாரிடம் என்னென்ன
காரணங்கள் சொல்லியுள்ளாரோ அதையும் கேட்டு அனைவரும் ஒரு முடிவுக்கு
வரவேண்டும் என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வந்தபோது எதிரில் வந்த ஒருவர் அய்யாவைப்
பார்த்து, நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு
பிளேடு செலவு மிச்சம், உனக்கு என்ன நஷ்டம் என்று கூறியுள்ளார்.

தமிழிசை ராஜா அண்ணாமலை (செட்டியாரும்), ஆர்.கே. சண்முகம் (செட்டியாரும்)
தமிழிசை இயக்கம் தொடங்கி அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். பல லட்சம்
செலவு செய்தனர். வீண் விரயம் செய்வதைக் கண்டித்து அய்யா கூட்டத்தில்
பேசினார்.

மருமகனுக்குப் பல் தேய்க்க சோம்பேறித்தனம். பல் தேய்க்கும்படி மருமகனிடம்
சொல்ல வெட்கப்பட்டார் மாமியார். ஒரு யுக்தி தோன்றியது மாமியாருக்கு.
கரும்பு மென்று தின்றால் பல் சுத்தமாகுமே என்று நினைத்து, மாப்பிள்ள இந்த
ஊர்க் கரும்பு ரொம்ப ருசியாக இருக்கும். ஒரு பணத்துக்குக் கரும்பு
வாங்கிச் சாப்பிடுங்கள் என்று கூறி பணமும் கொடுத்து அனுப்பினார்.
மாப்பிள்ளையோ பணத்தை வாங்கி எள்ளுப் புண்ணாக்கு வாங்கித் தின்றுவிட்டு
பல்லை மேலும் கேவலமாக்கி வந்து நின்றார். மாமியாருக்கு எப்படி
இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதுபோலல்லவா இந்தத்
தமிழிசைக் கிளர்ச்சியும் ஆகியுள்ளது. தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவு
உணர்வு தோன்றிவிடுமானால் தமிழிசை தானாக வளர்ந்துவிடும் என்றார்.

(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து)

Sunday, June 26, 2011

தமிழ் நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள்

தமிழ் நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234. இவற்றின் பட்டியல் மாவட்டவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] சென்னை மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 1 - இராயபுரம் இராயபுரம்
* 2 - துறைமுகம் துறைமுகம்
* 3 - ராதாகிருஷ்ணன் நகர் ராதாகிருஷ்ணன் நகர்
* 4 - பூங்கா நகர் நீக்கப்பட்டது
* 5 - பெரம்பூர் பெரம்பூர்
* 6 - புரசைவாக்கம் நீக்கப்பட்டது
* 7 - எழும்பூர் எழும்பூர் (தனி)
* 8 - அண்ணா நகர் அண்ணா நகர்
* 9 - தியாகராய நகர் தியாகராய நகர்
* 10 - ஆயிரம் விளக்கு ஆயிரம் விளக்கு
* 11 - சேப்பாக்கம் நீக்கப்பட்டது
* 12 - திருவல்லிக்கேணி நீக்கப்பட்டது
* 13 - மைலாப்பூர் மைலாப்பூர்
* 14 - சைதாப்பேட்டை சைதாப்பேட்டை

கொளத்தூர்

வில்லிவாக்கம்

திரு.வி.க நகர் (தனி)

விருகம்பாக்கம்

வேளச்சேரி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

[தொகு] திருவள்ளூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதி சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதி
* 15 - கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி
* 16 - பொன்னேரி பொன்னேரி (தனி)
* 17 - திருவொற்றியூர் திருவொற்றியூர்
* 18 - வில்லிவாக்கம் இது சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
* 19 - பூவிருந்தவல்லி பூவிருந்தவல்லி (தனி)
* 20 - திருவள்ளூர் திருவள்ளூர்
* 21 - திருத்தணி திருத்தணி
* 22 - பள்ளிப்பட்டு நீக்கப்பட்டது

ஆவடி

மதுரவாயல்

அம்பத்தூர்

மாதவரம்

[தொகு] காஞ்சிபுரம் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 23 - ஆலந்தூர் ஆலந்தூர்
* 24 - தாம்பரம் தாம்பரம்
* 25 - திருப்போரூர் திருப்போரூர்
* 26 - செங்கல்பட்டு செங்கல்பட்டு
* 27 - மதுராந்தகம் மதுராந்தகம்
* 28 - அச்சரப்பாக்கம் நீக்கப்பட்டது
* 29 - உத்திரமேரூர் உத்திரமேரூர்
* 30 - காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
* 31 - திருப்பெரும்புதூர் திருப்பெரும்புதூர் (தனி)

சோளிங்கநல்லூர்

பல்லாவரம்

செய்யூர் (தனி)

[தொகு] வேலூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 32 - அரக்கோணம் அரக்கோணம் (தனி)
* 33 - சோளிங்கர் சோளிங்கர்
* 34 - ராணிப்பேட்டை ராணிப்பேட்டை
* 35 - ஆற்காடு ஆற்காடு
* 36 - காட்பாடி காட்பாடி
* 37 - குடியாத்தம் குடியாத்தம் (தனி)
* 38 - பேரணாம்பட்டு நீக்கப்பட்டது
* 39 - வாணியம்பாடி வாணியம்பாடி
* 40 - நாட்ராம்பள்ளி நீக்கப்பட்டது
* 41 - திருப்பத்தூர் திருப்பத்தூர்
* 42 - அணைக்கட்டு அணைக்கட்டு
* 43 - வேலூர் வேலூர்

கீழ்வைத்தனன் குப்பம் (தனி)

ஆம்பூர்

ஜோலார் பேட்டை

[தொகு] திருவண்ணாமலை மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 44 - செங்கம் செங்கம் (தனி)
* 45 - தண்டராம்பட்டு நீக்கப்பட்டது
* 46 - திருவண்ணாமலை திருவண்ணாமலை
* 47 - கலசப்பாக்கம் கலசப்பாக்கம்
* 48 - போளூர் போளூர்
* 49 - ஆரணி ஆரணி
* 50 - செய்யாறு செய்யாறு
* 51 - வந்தவாசி வந்தவாசி (தனி)
* 52 - பெரணமல்லூர் நீக்கப்பட்டது

கீழ்பெண்ணாத்தூர்

[தொகு] விழுப்புரம் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 53 - மேல்மலையனூர் நீக்கப்பட்டது
* 54 - செஞ்சி செஞ்சி
* 55 - திண்டிவனம் (தனி) திண்டிவனம்
* 56 - வானூர் வானூர் (தனி)
* 57 - கண்டமங்கலம் நீக்கப்பட்டது
* 58 - விழுப்புரம் விழுப்புரம்
* 59 - முகையூர் நீக்கப்பட்டது
* 60 - திருநாவலூர் நீக்கப்பட்டது
* 61 - உளுந்தூர்ப்பேட்டை உளுந்தூர்ப்பேட்டை
* 62 - இரிஷிவந்தியம் இரிஷிவந்தியம்
* 63 - சின்னசேலம் நீக்கப்பட்டது
* 64 - சங்கராபுரம் சங்கராபுரம்

மயிலம்

விக்கிரவாண்டி

திருக்கோயிலூர்

கள்ளக்குறிச்சி (தனி)

[தொகு] கடலூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 65 - நெல்லிக்குப்பம் நீக்கப்பட்டது
* 66 - கடலூர் கடலூர்
* 67 - பண்ருட்டி பண்ருட்டி
* 68 - குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி
* 69 - புவனகிரி புவனகிரி
* 70 - காட்டுமன்னார்கோயில் காட்டுமன்னார்கோயில் (தனி)
* 71 - சிதம்பரம் சிதம்பரம்
* 72 - விருத்தாச்சலம் விருத்தாச்சலம்
* 73 - மங்களூர் நீக்கப்பட்டது

திட்டக்குடி (தனி)

நெய்வேலி

[தொகு] கிருஷ்ணகிரி மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 74 - ஓசூர் ஓசூர்
* 75 - தளி தளி
* 76 - காவேரிப்பட்டினம் நீக்கப்பட்டது
* 77 - கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி
* 78 - பர்கூர் பர்கூர்

ஊத்தங்கரை (தனி)

வேப்பனஹள்ளி

[தொகு] தர்மபுரி மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 79 - அரூர் அரூர் (தனி)
* 80 - மொரப்பூர் நீக்கப்பட்டது
* 81 - பாலக்கோடு பாலக்கோடு
* 82 - தர்மபுரி தர்மபுரி
* 83 - பெண்ணாகரம் பெண்ணாகரம்

பாப்பிரெட்டிபட்டி

[தொகு] சேலம் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்

கங்கவள்ளி (தனி)
* 84 - மேட்டூர் மேட்டூர்
* 85 - தாரமங்கலம் நீக்கப்பட்டது
* 86 - ஓமலூர் ஓமலூர்
* 87 - ஏற்காடு (தனி) ஏற்காடு (தனி)
* 88 - சேலம்-I நீக்கப்பட்டது
* 89 - சேலம்-II நீக்கப்பட்டது

சேலம்-வடக்கு

சேலம்-தெற்கு

சேலம்-மேற்கு
முன்பு நாமக்கல் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது சங்ககிரி
* 90 - வீரபாண்டி வீரபாண்டி
* 91 - பனமரத்துப்பட்டி நீக்கப்பட்டது
* 92 - ஆத்தூர் ஆத்தூர் (தனி)
* 93 - தலைவாசல் நீக்கப்பட்டது
* 94 - எடப்பாடி எடப்பாடி

[தொகு] நாமக்கல் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 95 - இராசிபுரம் இராசிபுரம் (தனி)
* 96 - சேந்தமங்கலம் (தனி) சேந்தமங்கலம் (தனி)
* 97 - நாமக்கல் (தனி) நாமக்கல்
* 98 - கபிலர்மலை நீக்கப்பட்டது
* 99 - திருச்செங்கோடு திருச்செங்கோடு

குமாரபாளையம்

பரமத்தி-வேலூர்
* 100 - சங்ககிரி சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

[தொகு] கோயம்புத்தூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 101 - மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம்
* 103 - தொண்டாமுத்தூர் தொண்டாமுத்தூர்
* 104 - சிங்காநல்லூர் சிங்காநல்லூர்
* 105 - கோயம்புத்தூர் மேற்கு நீக்கப்பட்டது
* 106 - கோயம்புத்தூர் கிழக்கு நீக்கப்பட்டது
* 107 - பேரூர் நீக்கப்பட்டது
* 108 - கிணத்துக்கடவு கிணத்துக்கடவு
* 109 - பொள்ளாச்சி பொள்ளாச்சி
* 110 - வால்பாறை வால்பாறை (தனி)
* 113 - பொங்கலூர் நீக்கப்பட்டது

சூலூர்

கோயம்புத்தூர் வடக்கு

கோயம்புத்தூர் தெற்கு

கவுண்டம்பாளையம்

[தொகு] திருப்பூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 114 - பல்லடம் பல்லடம்
* 115 - திருப்பூர் நீக்கப்பட்டது

மடத்துக்குளம்

திருப்பூர் வடக்கு

திருப்பூர் தெற்கு
* 111 - உடுமலைப்பேட்டை உடுமலைப்பேட்டை
* 102 - அவினாசி (தனி) அவினாசி
* 117 - காங்கேயம் காங்கேயம்
* 112 - தாராபுரம் தாராபுரம் (தனி)


[தொகு] ஈரோடு மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 116 - வெள்ளக்கோயில் நீக்கப்பட்டது
* 118 - மொடக்குறிச்சி மொடக்குறிச்சி
* 119 - பெருந்துறை பெருந்துறை
* 120 - ஈரோடு நீக்கப்பட்டது
* 121 - பவானி பவானி
* 122 - அந்தியூர் அந்தியூர்
* 123 - கோபிச்செட்டிப்பாளையம் கோபிச்செட்டிப்பாளையம்
* 124 - பவானிசாகர் பவானிசாகர் (தனி)
* 125 - சத்தியமங்கலம் நீக்கப்பட்டது

ஈரோடு கிழக்கு

ஈரோடு மேற்கு

[தொகு] நீலகிரி மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 126 - குன்னூர் குன்னூர்
* 127 - உதகமண்டலம் உதகமண்டலம்
* 128 - கூடலூர் கூடலூர் (தனி)

[தொகு] திண்டுக்கல் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 129 - பழநி பழநி
* 130 - ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம்
* 131 - நிலக்கோட்டை நிலக்கோட்டை (தனி)
* 132 - நத்தம் நத்தம்
* 133 - திண்டுக்கல் திண்டுக்கல்
* 134 - ஆத்தூர் ஆத்தூர்
* 135 - வேடசந்தூர் வேடசந்தூர்

[தொகு] தேனி மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 136 - பெரியகுளம் பெரியகுளம்- தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது
* 137 - தேனி நீக்கப்பட்டது
* 138 - போடிநாயக்கனூர் போடிநாயக்கனூர்
* 139 - கம்பம் கம்பம்
* 140 - ஆண்டிப்பட்டி ஆண்டிப்பட்டி

[தொகு] மதுரை மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 141 - சேடப்பட்டி நீக்கப்பட்டது
* 142 - திருமங்கலம் திருமங்கலம்
* 143 - உசிலம்பட்டி உசிலம்பட்டி
* 144 - சோழவந்தான் சோழவந்தான் (தனி)
* 145 - திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம்
* 146 - மதுரை மேற்கு மதுரை மேற்கு
* 147 - மதுரை மத்தி மதுரை மத்தி
* 148 - மதுரை கிழக்கு மதுரை கிழக்கு
* 149 - சமயநல்லூர் நீக்கப்பட்டது
* 150 - மேலூர் மேலூர்

மதுரை வடக்கு

மதுரை தெற்கு

[தொகு] கரூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 151 - அரவக்குறிச்சி அரவக்குறிச்சி
* 152 - கரூர் கரூர்
* 153 - கிருஷ்ணராயபுரம் கிருஷ்ணராயபுரம்
* 154 - குளித்தலை குளித்தலை

[தொகு] பெரம்பலூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 155 - பெரம்பலூர் பெரம்பலூர் (தனி)
* 156 - வரகூர் நீக்கப்பட்டது

[தொகு] அரியலூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 157 - அரியலூர் அரியலூர்
* 158 - ஆண்டிமடம் நீக்கப்பட்டது
* 159 - ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம்

குன்னம்

[தொகு] திருச்சிராப்பள்ளி மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 160 - மருங்காபுரி நீக்கப்பட்டது
* 161 - தொட்டியம் நீக்கப்பட்டது
* 162 - உப்பிலியாபுரம் நீக்கப்பட்டது
* 163 - முசிறி முசிறி
* 164 - இலால்குடி இலால்குடி
* 165 - ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம்
* 166 - திருச்சிராப்பள்ளி-I நீக்கப்பட்டது
* 167 - திருச்சிராப்பள்ளி-II நீக்கப்பட்டது
* 168 - திருவெறும்பூர் திருவெறும்பூர்

மணப்பாறை

திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சிராப்பள்ளி மேற்கு

மண்ணச்சநல்லூர்

துறையூர் (தனி)

[தொகு] நாகப்பட்டினம் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 169 - சீர்காழி சீர்காழி (தனி)
* 170 - பூம்புகார் பூம்புகார்
* 171 - மயிலாடுதுறை மயிலாடுதுறை
* 172 - குத்தாலம் நீக்கப்பட்டது
* 173 - நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
* 174 - வேதாரண்யம் வேதாரண்யம்

கீழ்வேளூர்

[தொகு] திருவாரூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 175 - நன்னிலம் நன்னிலம்
* 176 - திருவாரூர் திருவாரூர்
* 177 - திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி (தனி)
* 178 - மன்னார்குடி மன்னார்குடி

[தொகு] தஞ்சாவூர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 179 - பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை
* 180 - பேராவூரணி பேராவூரணி
* 181 - ஒரத்தநாடு ஒரத்தநாடு
* 182 - திருவோணம் நீக்கப்பட்டது
* 183 - தஞ்சாவூர் தஞ்சாவூர்
* 184 - திருவையாறு திருவையாறு
* 185 - பாபநாசம் பாபநாசம்
* 186 - வலங்கைமான் நீக்கப்பட்டது
* 187 - கும்பகோணம் கும்பகோணம்
* 188 - திருவிடைமருதூர் திருவிடைமருதூர் (தனி)

[தொகு] புதுக்கோட்டை மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 189 - திருமயம் திருமயம்
* 190 - கொளத்தூர் (புதுக்கோட்டை) நீக்கப்பட்டது
* 191 - புதுக்கோட்டை புதுக்கோட்டை
* 192 - ஆலங்குடி ஆலங்குடி
* 193 - அறந்தாங்கி அறந்தாங்கி

விராலிமலை

கந்தர்வக்கோட்டை (தனி)

[தொகு] சிவகங்கை மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 194 - திருப்பத்தூர் திருப்பத்தூர்
* 195 - காரைக்குடி காரைக்குடி
* 196 - இளையான்குடி நீக்கப்பட்டது
* 197 - சிவகங்கை சிவகங்கை
* 198 - மானாமதுரை மானாமதுரை (தனி)

[தொகு] இராமநாதபுரம் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 199 - திருவாடாணை திருவாடாணை
* 200 - பரமக்குடி பரமக்குடி
* 201 - இராமநாதபுரம் இராமநாதபுரம்
* 202 - கடலாடி நீக்கப்பட்டது
* 203 - முதுகுளத்தூர் முதுகுளத்தூர்

[தொகு] விருதுநகர் மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 204 - அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை
* 205 - சாத்தூர் சாத்தூர்
* 206 - விருதுநகர் விருதுநகர்
* 207 - சிவகாசி சிவகாசி
* 208 - திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் (தனி)
* 209 - இராஜபாளையம் இராஜபாளையம்

திருச்சுழி

[தொகு] தூத்துக்குடி மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 210 - விளாத்திகுளம் விளாத்திகுளம்
* 211 - ஒட்டப்பிடாரம் ஒட்டப்பிடாரம் (தனி)
* 212 - கோவில்பட்டி கோவில்பட்டி
* 213 - சாத்தான்குளம் நீக்கப்பட்டது
* 214 - திருச்செந்தூர் திருச்செந்தூர்
* 215 - ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம்
* 216 - தூத்துக்குடி தூத்துக்குடி

[தொகு] திருநெல்வேலி மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 217 - சங்கரன்கோவில் சங்கரன்கோவில் (தனி)
* 218 - வாசுதேவநல்லூர் வாசுதேவநல்லூர் (தனி)
* 219 - கடையநல்லூர் கடையநல்லூர்
* 220 - தென்காசி தென்காசி
* 221 - ஆலங்குளம் ஆலங்குளம்
* 222 - திருநெல்வேலி திருநெல்வேலி
* 223 - பாளையங்கோட்டை பாளையங்கோட்டை
* 224 - சேரன்மகாதேவி நீக்கப்பட்டது
* 225 - அம்பாசமுத்திரம் அம்பாசமுத்திரம்
* 226 - நாங்குநேரி நாங்குநேரி
* 227 - ராதாபுரம் ராதாபுரம்

[தொகு] கன்னியாகுமரி மாவட்டம்

சீரமைப்பிற்கு முன்னுள்ள தொகுதிகள் சீரமைப்பிற்கு பின்னுள்ள தொகுதிகள்
* 228 - கன்னியாகுமரி கன்னியாகுமரி
* 229 - நாகர்கோயில் நாகர்கோயில்
* 230 - குளச்சல் குளச்சல்
* 231 - பத்மனாபபுரம் பத்மனாபபுரம்
* 232 - திருவட்டாறு நீக்கப்பட்டது
* 233 - விளவங்கோடு விளவங்கோடு
* 234 - கிள்ளியூர் கிள்ளியூர்