தமிழ் ஆண்டு வரலாறு
கண்ணன் 60,000 பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்ற நாரதனுக்கு ஆசை வந்துவிடவே "கண்ணா" நீயே எல்லாப் பெண்களையும் அனுபவிக்கிறாயே, எனக்கொரு பெண்ணெய் தரக் கூடாத?" என்று கேட்டான். கண்ணனும், சரி இந்த ஊருக்குள் நான் இல்லாத வீட்டிற்குள் இருக்கின்ற பெண்ணை நீ அனுபவித்துக் கொள் " என்று அனுமதித்தான்.
நாரதனும் ஒவ்வொரு வீடாய் செல்ல, எல்லா வீட்டிலும் கண்ணன் காட்சியளித்தான். வெறுத்துப்போன நாரதன் தானே பெண்ணாகி பாலியலுக்கு உள்ளாகி பல குழந்தைகளைப் பெட்றேடுக்க, அந்தக் குழந்தைகளின் பெயர்கள்தான் இன்றைக்குத் தமிழ் ஆண்டுகள் எனபடுகிற பிரபவ முதல் அட்சயசைத்ர முதல் பகுணா வரை உள்ள சமற்கிருத மாதங்களே தமிழில் சித்திரை முதல் பங்குனி வரை என இடம் மாற்றியுள்ளன. இப்படி, இட்டுக்கட்டித் தமிழர் பண்பாட்டையும் பெண்களையும் இழிவுபடுத்கின்ற இந்த 60 ஆண்டு முறையையும் 12 மாதங்களையும் இனியும் நாம் பின்பற்ற வேண்டுமா? வரையிலான ௬௦ ஆண்டுகள். மேலும் அந்த ௬௦ பெயர்களில் ஒன்றுக்கூடத் தமிழ் இல்லை, எல்லாம் சமற்கிருதப் பெயர்களே.
எனவேதான், தமிழறிஞ்ர்கள் தி.பி 1952 ஆம் ஆண்டு ஒன்றுகூடித் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வதென்றும் சுறவம் (தை) திங்களை தமிழ் ஆண்டுப் பிறப்பகவும் சுறவம் முதல் சிலை வரைத் தமிழ் திங்களாக (மாதம்) பின்பற்றுவது என முடிவு செய்தனர். தமிழ்நாடு அரசு தி.பி 2002 -ல் இருந்து தமிழ் ஆண்டாக அறிவித்துச் சமற்கிருத ஆண்டையும் பின்பற்றிவருகிறது. அனால் தமிழ்த் தேசிய அமைப்புகள் முறையாக தமிழ் ஆண்டு திங்களை (மாதம்) பின்பற்றி வருகிறார்கள் இவற்றை தமிழக மக்கள் ஏற்பு நாளாகக் கொள்வது எப்போது?
தமிழரின் காலக்கணக்கு
தமிழர்கள் பொழுதை இருவகையாக பிரித்து பெரும் பொழுது, சிறுபொழுது என வழங்குவர். ஓர் ஆண்டுக்குரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது எனப்படும். ஒவ்வொரு பெரும்பொழுதும் இரு திங்களைக் கொண்டது.
தமிழ்த் திங்கள் |
௧ | சுறவம் | ௭ | கடகம் |
௨ | கும்பம் | ௮ | மடங்கள் |
௩ | மீனம் | ௯ | கன்னி |
௪ | மேழம் | 10 | துலை |
௫ | விடை | ௧௧ | நளி |
௬ | ஆடவை | ௧௨ | சிலை |
முன் பனிக்காலம் - சிலை, சுறவம்
பின் பனிக்காலம் -கும்பம், மீனம்
இளவேனிற்காலம் -மேழம், விடை
முதுவேனிற்காலம் -ஆடவை, கடகம்
கார்காலம் -மடங்கள், கன்னி
குளிர்காலம் -துலை, நளி
காலை - பகற்பொழுதின் முதற்கூறு
நண்பகல் -பகற்பொழுதின் நடுக்கூறு
மாலை -நாளின் பிற்பகுதி
யாமம் -நள்ளிரவு
வைகறை -அதிகாலை
நாளின் ஆறு கூறுகளே சிறுபொழுது எனப்படும் ஒவ்வொரு சிறுபொழுதும் 4 மணி நேரம் கொண்டது.
தமிழர்களுக்கு எல்லா நாள்களும், மணித்துளிகளும், நல்ல நேரங்களே. உழைக்கும் தமிழர்கள் நல்ல நேரம், கேட்ட நேரம் பார்த்து உழைக்க முடியுமா? பேருந்து, மகிழுந்து வானூர்தி, துள்ளுந்து, சுமையுந்து, தொடர்வண்டி, தொளிகூடம், நல்ல நேரம் கெட்டநேரம் பார்த்து பணி செய்ய முடியுமா? முடியாது.
உழைக்காமல் ஏமாற்றிப் பிழைக்கும் பார்ப்பனியக் கூட்டத்தின் வேலை, நல்ல நேரம், கேட்ட நேரம் என்பதெல்லாம் மூடர்களின் கூற்றே ஆகும்.
ஆரிய மூலம் | ஆரிய மாதம் | |
10 | தை | புனர்தை |
௧௧ | மாசி | மகசி |
௧௨ | பங்குனி | பல்குணா |
௧ | சித்திரை | சைத்திரா |
௨ | வைகாசி | வைசாகி |
௩ | ஆனி | மூலன் |
௪ | ஆடி | உத்திராட |
௫ | ஆவணி | அவிட்ட |
௬ | புரட்டாசி | பூட்டாதி |
௭ | ஐப்பசி | அசுவதி |
௮ | கார்த்திகை | கிருத்திகா |
௯ | மார்கழி | மிருகசீரிசா |